துப்பாக்கியால் சுட்டு மான்கள் வேட்டை

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை பெரியஏரி பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன. அப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. தகவலறிந்து வந்த போலீசார் சோதனை செய்ததில் மான்களை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியது தெரிந்தது.

அங்கேயே நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை முடிவில் மான்களின் உடலில் உள்ளது நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் பால்ரஸ் குண்டு என்றும், கொல்லப்பட்ட மான்களுக்கு 1 வயது இருக்கும் என்பது தெரியவந்தது. இதை யடுத்து வனத்துறையினர் தனிப் படை அமைத்து மான் வேட்டையாடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post துப்பாக்கியால் சுட்டு மான்கள் வேட்டை appeared first on Dinakaran.

Related Stories: