தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை: வேதாரண்யம் அருகே தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆறுகாட்டுத்துறையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். இலங்கையைச் சார்ந்த பைபர் படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களின் படகின் மீது ஏறி கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி அட்டுழியம் செய்துள்ளனர். மீனவர்களின் படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, மீன்கள், வலைகள், செல்போன்களை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்

The post தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: