தேசிய மணல் வீடுகள் தினம் பள்ளி மாணவ, மாணவிகள் மணல் சிற்பம் செய்து அசத்தல்

வேதாரண்யம், ஆக.8: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா அண்டர்கார்டு சுந்தரேச விலாஸ் அரசு உதவி பெறும் பள்ளியில் தேசிய மணல் சிற்பதினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் மணல் சிற்பங்கள் செய்து பரிசுகளை பெற்றனர். நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியர் வசந்தா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் மணலால் வீடு, கோயில் மற்றும் மணல் சிற்பங்களை செய்தனர். சிறப்பாக மணல் சிற்பங்கள் செய்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஆறுமுகம், தலைமை ஆசிரியர் பொறுப்பு ரவீந்திரன் மற்றும் மாணவ, மாணவிகள் கல்வி வளர்ச்சிகுழு பெற்றோர், ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டனர்.

The post தேசிய மணல் வீடுகள் தினம் பள்ளி மாணவ, மாணவிகள் மணல் சிற்பம் செய்து அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: