சூதாடிய 12 பேர் கும்பல் கைது

தர்மபுரி, ஆக.8:பென்னாகரம் போலீஸ் எஸ்ஐ கருணாநிதி மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது, ஜங்கம்பட்டி கிராமத்தில் சூதாடிக்கொண்டிருந்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த மாதேஷ்(40), சுப்பிரமணி(44), முனுசாமி(49), சந்தீப்(29), வெங்கடாஜலம்(54), ஹரிகிருஷ்ணா(34), சுரேஷ்குமார்(44), குமார்(44) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 8 பேரையும், போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ₹1,530ஐ பறிமுதல் செய்தனர். இதேபோல் ஏரியூர் போலீஸ் எஸ்ஐ பூபதி மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது ஏரியூர் ஓங்காளியம்மன் கோயில் பின்புறத்தில் சூதாடிய அதே பகுதியை சேர்ந்த செந்தில், கோவிந்தராஜ், ரவி(45), சிவா(40) ஆகிய 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ₹2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

The post சூதாடிய 12 பேர் கும்பல் கைது appeared first on Dinakaran.

Related Stories: