சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக அனைத்து சமூகங்களும் ஒன்று திரள வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகம், ஒடிசா, ஜார்க்கண்ட், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியமாகி இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு தமிழ்நாட்டிலும் சாத்தியம்தான். 13 கோடி மக்கள்தொகை கொண்ட பீகாரில் ரூ.500 கோடிக்கும் குறைவான செலவில் 45 நாட்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடிகிறது என்றால், 7.64 கோடி மட்டுமே மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டில் இன்னும் குறைவான செலவில், குறைவான நாட்களில் இன்னும் சிறப்பாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும். எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக அனைத்து சமூகங்களும் ஒன்று திரண்டு சமூகநீதி பாதுகாக்கப்படுவதை அனைத்து சமுதாயங்களும் உறுதி செய்ய வேண்டும்.

The post சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக அனைத்து சமூகங்களும் ஒன்று திரள வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: