நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

பாலக்கோடு, ஆக.7: பாலக்கோடு அடுத்த சவுளுரான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பச்சியப்பன், விவசாயி. இவரது மனைவி குப்பம்மாள்(45). இவருக்கும் இவரது உறவினரான ஜெயவேல் குடும்பத்தினருக்கும் நிலப்பிரச்னையில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி காலை 6 மணிக்கு விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த குப்பம்மாளை, ஜெயவேல் மற்றும் அவரது மனைவி குமுதா (33), அவரது தாய் சந்திரா (65), மற்றும் 15 வயது மகன், 13 வயது மகள் ஆகியோர் சேர்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில், படுகாயமடைந்த குப்பம்மாள் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயவேல் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: