காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எடப்பாடி நிவாரணம்

குமாரபாளையம்: காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் கரையோரங்களில், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இந்த பகுதியில் உள்ளவர்களை தமிழக அரசு நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று காலை குமாரபாளையம் வந்தார்.

வெள்ளப்பகுதிகளை பார்வையிட்ட அவர், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு வேட்டி சேலை, 5 கிலோ அரிசி, ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். அப்போது, அவர் கூறுகையில், ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசிடம் வலியுறுத்தி மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா மற்றும் எம்எல்ஏக்கள் உடனிருந்தனர்.

The post காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எடப்பாடி நிவாரணம் appeared first on Dinakaran.

Related Stories: