×

திண்டுக்கல் நல்லாம்பட்டி அருகே பைக் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..!!

திண்டுக்கல்: நல்லாம்பட்டி பிரிவு அருகே பைக் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். பைக் மீது கார் மோதிய விபத்தில் ஜார்ஜ், அருணா தம்பதி மற்றும் அவர்களின் இரு குழந்தைகள் பலியாகினர். 6 வயது மகன், 10 வயது மகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த மேலும் மூவர் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post திண்டுக்கல் நல்லாம்பட்டி அருகே பைக் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Dindigul Nallampatty ,Dindigul ,Nallampatty Division ,George ,Aruna ,Dinakaran ,
× RELATED வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன்...