×

திருப்பூர் அருகே விபத்து; சென்னை சிறுவன் பலி: 7 பேர் படுகாயம்


திருப்பூர்: சென்னை கொருக்குப்பேட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் ஹரிஹரன்(33). இவர், தனது மனைவி யோகபிரியா (31), தாய் புஷ்பா (55), மகன் யஸ்விந்த்ராஜ் (4) ஆகியோருடன் சென்னையில் இருந்து கோவைக்கு காரில் வந்தார். கோவையில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் மீண்டும் நேற்று மாலை அனைவரும் சென்னைக்கு காரில் திரும்பிக்கொண்டு இருந்தனர். காரை, ஹரிஹரன் ஓட்டினார். கோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே வெள்ளமடையில் வந்தபோது காரும் எதிரே வந்த சரக்கு வேனும் மோதிக்கொண்டன.

இதில் காரில் வந்தவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் சிறுவன் யஸ்விந்த்ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தார். படுகாயம் அடைந்த ஹரிஹரன், புஷ்பா, யோகபிரியா ஆகியோர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். வேனில் வந்த டிரைவர் சஞ்சீவி (30), ராஜ்குமார் (18) வரக்பர்நேதா (46) தரண்தாஸ்(33) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.

The post திருப்பூர் அருகே விபத்து; சென்னை சிறுவன் பலி: 7 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Chennai ,Hariharan ,Korukupet Periyar Nagar, Chennai ,Yogapiriya ,Pushpa ,Yasvindraj ,Goa ,
× RELATED மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு...