ஒலிம்பிக்: பஞ்சாப் முதல்வருக்கு ஒன்றிய அரசு மறுப்பு..!!

டெல்லி: பாரீஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட பஞ்சாப் முதல்வருக்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல ஒன்றிய வெளியுறவுத்துறை மறுப்பு தெரிவித்தது. இந்திய ஹாக்கி அணி விளையாடும் போட்டியை காண்பதற்காக பகவந்த் மான் சிங் பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல இருந்தார். இன்று முதல் 9-ம் தேதி வரை பிரான்ஸ் செல்ல இருந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு ஒன்றிய அரசுக்கு அனுமதி மறுத்தது. தாமதமாக கோரிக்கை வைத்ததால் பஞ்சாப் முதல்வருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ஒன்றிய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

The post ஒலிம்பிக்: பஞ்சாப் முதல்வருக்கு ஒன்றிய அரசு மறுப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: