×

ஈரோடு கொடுமுடியில் 59 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது..!!

ஈரோடு: காவிரியில் 1.70 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படுவதால் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 59 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இலுப்பை தோப்பு, சத்திரப்பட்டி, வடக்கு தெரு ஆகிய இடங்களில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம் செய்யப்பட்டனர். கரையோர பகுதிகளில் வருவாய்த்துறை, காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post ஈரோடு கொடுமுடியில் 59 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது..!! appeared first on Dinakaran.

Tags : Kodumudi, Erode ,Erode ,Cauvery ,Kodumudi ,Erode district ,Ilupai Thopp ,Chatrapatti ,North Street ,Dinakaran ,
× RELATED ஈரோடு செட்டிபாளையத்தில் உள்ள தனியார்...