முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை விழா

காரிமங்கலம், ஜூலை 30: காரிமங்கலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று சிறப்பு ஹோமம், தீபாராதனை நடந்தது. இதையொட்டி, ராஜஅலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தர்மகர்த்தா சரவணன், கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் இயக்குனர் ரவிசங்கர் மற்றும் பலர் செய்திருந்தனர். இதேபோல், மொரசுபட்டி முருகன் கோயில், சென்னம்பட்டி முருகன் கோயில் உட்பட பல்வேறு முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, நேற்று சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

The post முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை விழா appeared first on Dinakaran.

Related Stories: