×

இலங்கைக்கு 141 ரன் இலக்கு

மகளிர் ஆசிய கோப்பை 2வது அரையிறுதியில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் நேற்று மோதின. தம்புல்லாவில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீசியது. பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன் குவித்தது. குல் பெரோஸா 25, முனீபா அலி 37, சிட்ரா அமின் 10, கேப்டன் நிடா தார் 23 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அலியா ரியாஸ் 16 ரன், பாத்திமா சனா 23 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை பந்துவீச்சில் பிரபோதனி, கவிஷா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 141 ரன் எடுத்தால் பைனலுக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை, 10 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 69 ரன் எடுத்திருந்தது.

 

The post இலங்கைக்கு 141 ரன் இலக்கு appeared first on Dinakaran.

Tags : Sri ,Lanka ,Pakistan ,Sri Lanka ,Women's Asia Cup ,Dambulla ,Gul Beroza… ,Dinakaran ,
× RELATED கைதான தூத்துக்குடி மீனவர்கள் 12...