×

மின்கட்டணம் உயர்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்

 

நீடாமங்கலம், ஜூலை 26: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மின்சார வாரிய அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜான் கென்னடி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி , மாவட்ட குழு உறுப்பினர் சுமதி , ஒன்றிய குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை ,செல்வமணி. சண்முகவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மின்கட்டணம் உயர்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Marxist ,Communist ,Needamangalam ,Tiruvarur District ,Needamangalam Electricity Board Office ,Communist Party ,Communist Party of India ,Union Secretary ,John Kennedy ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு தொடர் சிகிச்சை