பழநி அருகே டூவீலர் விபத்தில் முதியவர் பலி

பழநி, ஜூலை 24: ஒட்டன்சத்திரம் தாலுகா, கொங்கபட்டியை சேர்ந்தவர் பெரியகோபால் (75). இவர் நேற்று பள்ளிக்கூடத்தான் வலசு பிரிவு அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி பாலத்தின் ஓரத்தில் மோதி கீழே விழுந்தார். இதில் தலையில் அடுபட்டு படுகாயமடைந்த பெரியகோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பழநி அருகே டூவீலர் விபத்தில் முதியவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: