×

தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரிப்பு

 

திருப்பூர், ஜூலை 22: திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதமாக இங்கு உள்ளூர் தக்காளி வரத்து மிகவும் குறைவாக இருந்து வந்தது. இதனால் வெளியூர் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி வரத்து இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

வரத்து அதிகரித்தாலும் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் தொடர்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.800க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்றும் ஒரு பெட்டி ரூ.800க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் இரண்டாம் ரக தக்காளி ஒரு பெட்டி ரூ.500 முதல் 700 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. வியாபாரிகள் போட்டி போட்டு தக்காளியை வாங்கி சென்றனர். இதனால் மார்க்கெட்டில் விற்பனை மும்முரமாக நடந்தது.

The post தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Thennampalayam market ,Tirupur ,Palladam Road ,Tirupur Palladam Road ,Thennampalayam ,Dinakaran ,
× RELATED விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.23.85 லட்சம் நிதியுதவி