குடி போதையில் முதியவரை கல்லால் தாக்கிய பேரன்கள்

குமாரபுரம், ஜூலை 20: குமாரபுரம் அருகே கோயில் பிலாவிளை பகுதியை சேர்ந்தவர் ஞான சிகாமணி (78). இவரது மகன் ராஜ சுகன். இவரது மகன்கள் எட்வின் சந்தோஷ் (28), ஷைஜு (23). இவர்கள் இருவரும் போதையில் தந்தை ராஜசுகினை தாக்கிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் ஞான சிகாமணி அருகில் உள்ள டீக்கடைக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது பேரன்கள் இருவரும், சம்பவத்தை பார்த்தும் எதுவும் பேசாமல் சென்றுகொண்டு இருக்கிறாயா என்று கூறி, ஞானசிகாமணியை கீழே தள்ளி கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் வலி தாங்க முடியாமல் ஞான சிகாமணி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் கூடினார். உடனே பேரன்களும் இருவரும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த ஞான சிகாமணியை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கொற்றிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குடி போதையில் முதியவரை கல்லால் தாக்கிய பேரன்கள் appeared first on Dinakaran.

Related Stories: