ஈரோடு,ஜூலை19: உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் போலீஸ் ஸ்டேசன், சப். ஜெயிலில் நேற்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் உங்களை தேடி உங்கள் ஊரில் எனும் திட்டம் செயல்படுத்தப் படுகின்றது. இத்திட்டத்தின்படி ஈரோடு தாலூகாவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மோகன்தோட்டம் பகுதியில் மாநகராட்சி கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று வழக்கு விபரங்கள்,நிலுவை வழக்குகள் குறித்து பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து ஈரோடு கிளைச்சிறைக்கு சென்று பதிவேடுகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது, எஸ்பி ஜவகர், உதவி கலெக்டர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
The post உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் போலீஸ் ஸ்டேசன், சப்.ஜெயிலில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.