×
Saravana Stores

உழவர் சந்தைகளுக்கு வரத்தான 78.22 டன் காய்கறிகள் ரூ.30.20 லட்சத்திற்கு விற்பனை

ஈரோடு, அக்.28: ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளுக்கு வரத்தான 78.22 டன் காய்கறிகள் ரூ.30.20 லட்சத்திற்கு விற்பனையாகின.ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளிலும் விவசாயிகள் அதிக அளவில் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அனைத்து உழவர் சந்தைகளிலும் காலை முதலே காய்கறிகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதில், ஈரோடு மாநகரில் உள்ள சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 35.69 டன் காய்கறிகள் ரூ.13 லட்சத்து 88 ஆயிரத்து 804க்கு விற்பனையாகின.

இதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகளுக்கு மொத்தம் வரத்தான 78.22 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ.30 லட்சத்து 20 ஆயிரத்து 349க்கு விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post உழவர் சந்தைகளுக்கு வரத்தான 78.22 டன் காய்கறிகள் ரூ.30.20 லட்சத்திற்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode District ,Markets ,Erode Sampath Nagar ,Periyar Nagar ,Perundurai ,Gobi ,Sathyamangalam ,Thalavadi.… ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே...