திங்கள்சந்தை அருகே பைக் விபத்தில் ஓட்டல் ஊழியர் படுகாயம்

 

திங்கள்சந்தை, ஜூலை 14 : குளச்சல் பர்னட்டிவிளையை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (45). ஹோட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு உறவினர் ஷேக்முகமது (52) என்பவருடன் பைக்கில் திங்கள்நகரில் இருந்து குளச்சல் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

திங்கள்நகர் பூசாஸ்தான்விளை பகுதியில் சென்றபோது திடீரென ரோட்டின் குறுக்கே வந்த நாய் மீது எதிர்பாராத விதமாக பைக் மோதியது. இதில் பைக்குடன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சாகுல் ஹமீதிற்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சாகுல் ஹமீதை அக்கம் பக்கத்தினர் மீட்டு குளச்சலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின் அவர் நாகர்கோவில் கோட்டாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

The post திங்கள்சந்தை அருகே பைக் விபத்தில் ஓட்டல் ஊழியர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: