×

அரியலூர் மாவட்டத்தில் இன்று 7 மையங்களில் குரூப் 1 தேர்வு 2,551 பேர் தேர்வு எழுதுகின்றனர்

 

அரியலூர், ஜூலை 13: அரியலூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வினை 7 மையங்களில் மொத்தம் 2,551 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர் என்று மாவட்ட கலெக்டர் ஆனிமேரிஸ்வர்ணா தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-I தேர்வுகள் இன்று ( ஜுலை 13 ) முற்பகல் மட்டும் 7 தேர்வு மையங்களில் 2,551 தேர்வாளர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பேருந்து வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வின் கண்காணிப்பிற்காக துணை ஆட்சியர் நிலையில் 2 பறக்கும் படை அலுவலர்கள், 2 இயங்கு குழுக்கள் மற்றும் உதவியாளர் நிலையில் தேர்வுக்கூட நடைமுறைகளை கண்காணித்திட 7 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு பாதுகாப்பு பணிக்கு காவலர் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்களும் அனைத்து தேர்வு மையங்களிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தெரிவித்துள்ளார்.

The post அரியலூர் மாவட்டத்தில் இன்று 7 மையங்களில் குரூப் 1 தேர்வு 2,551 பேர் தேர்வு எழுதுகின்றனர் appeared first on Dinakaran.

Tags : Ariyalur district ,Ariyalur ,TNPSC ,Collector ,Annemariswarna ,Tamil Nadu Public Service Commission ,Dinakaran ,
× RELATED மாவட்ட திட்ட குழுவால் எந்த பலனும்...