கதுவாவில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ணை ராணுவம், போலீசாருடன் இணைந்து ராணுவம் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. தரை வழி தேடுதல் படைகளுக்கு உதவியாக ஹெலிகாப்டர்கள்,டிரோன்களும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வன பகுதியில் மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டை 3வது நாளான நேற்றும் நீடித்தது. இதற்கிடையே, கதுவா தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post தீவிரவாதிகளுக்கு எதிராக 3வது நாளாக வேட்டை கதுவா தாக்குதல்: 24 பேர் கைது appeared first on Dinakaran.