அதில், ‘ஆதார் தகவல்கள் பாதுகாப்பான முறையில் சேகரிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும் வரை, அதன் தகவல்களை ஒன்றிய அரசு கையாள்வதற்கு தடையோ அல்லது இடைக்காலமாக நிறுத்தி வைக்கவோ வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இம்மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அளித்த உத்தரவில், ‘ஆதார் விவகாரத்தில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தேவைப்பட்டால் உயர் நீதிமன்றங்களை நாடி கோரிக்கை வைக்கலாம்’ என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.
The post ஆதார் தகவல்களுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.