இந்த நிலையில், இமையனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் தெரிவித்துள்ளார். ஆனால் இமையன் திருமணம் செய்வதில் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இளம்பெண் கடந்த வாரம் எறும்பு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பிய இளம்பெண், பல் டாக்டரான இமையன் தன்னை காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாகவும், எனவே இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு அவினாசிபாளையம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் இமையன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு: பல் டாக்டர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.