×

ஆயுதங்களுடன் சுற்றிய 2 வாலிபர்கள் கைது

மதுரை, மே 26: மதுரையில் இரவு நேரத்தில் வழிப்பறியில் ஈடுபட ஆயுதங்களுடன் வலம் வந்த 2 வாலிபர்களை அடுத்தடுத்து போலீசார் கைது செய்தனர். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தப்பிச்செல்ல முயன்ற வாலிபரை போலீசார் சந்தேகத்தில் பேரில் விரட்டிச்சென்று பிடித்தனர். அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்த போலீசார், அதுகுறித்து விசாரணை நடத்தினர்.

அவர், அதே பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன்(22) எனவும் மது குடிக்க பணம் தேவைப்பட்டதால் வழிப்பறி செய்ய கத்தியுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து லோகேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சுப்பிரமணியபுரம் போலீசார் முத்துப்பட்டி பகுதியில் ரோந்து சென்றபோது, தப்பிச்செல்ல முயன்ற அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (32) என்பவர் சிக்கினார். இவர் மீது கொலை, தீ வைப்பு உள்ளிட்ட வழக்குகள் உள்ளதும், இரவில் தனியாக சிக்குவோரிடம் வழிப்பறி செய்ய, வாளுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், வாளை பறிமுதல் செய்தனர்.

The post ஆயுதங்களுடன் சுற்றிய 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Jaihindpuram, Madurai ,Dinakaran ,
× RELATED உத்தபுரம் கோயில் வழக்கு: ஆட்சியர் பதில்தர ஆணை