சூதாடிய 4 பேர் கைது

தர்மபுரி, மே 15: தர்மபுரி மாவட்டம், இண்டூர் போலீஸ் எஸ்ஐ சம்பத் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கோடனூர் ஏரிக்கரை பகுதியில் சென்ற போது, அங்குள்ள புதருக்குள் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்கள், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களில், அதே பகுதியைச் சேர்ந்த சேட்டு (35), வெங்கடேன் (26), தங்கம் (30), நாகராஜ் (45) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து, 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ₹11 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

The post சூதாடிய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: