இந்நிலையில் நேற்று தீர்த்தவாரியை முன்னிட்டு காலையில் மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கு பல்வேறு நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதனைத் தொடர்ந்து. செண்பகாதேவி உற்சவர் அம்மனை அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பின்பு செண்பகாதேவி அருவிக்கரை அருகில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் உள்ள அகஸ்தியர் பாதத்தில் உற்சவர் அம்மனை வைத்து அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து செண்பகாதேவி அருவியில் அம்மனை வைத்து சந்தனம், பன்னீர், குங்குமம், மலர்களால் மஞ்சள் நீராட்டு வைபவம் நடந்தது. அப்போது அருவி தடாகத்தில் உள்ள தண்ணீரில் மஞ்சள் கலந்து மஞ்சள் நீராக காட்சியளித்தது. தொடர்ந்து அம்மன் வீதி உலா நடத்தப்பட்டு அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
The post சித்ரா பவுர்ணமி திருவிழா; குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் மஞ்சள் நீராட்டு வைபவம் appeared first on Dinakaran.