ராமநாதபுரம், ஏற்காட்டில் புதிய வானிலை ரேடார்கள் விரைவில் அமைக்கப்படும்: மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் ரவிச்சந்திரன் தகவல்

சென்னை: தமிழகத்தில் நிலவும் வானிலை மாற்றங்களை துல்லியமாக கணிக்க கூடுதலாக 2 ரேடார்கள் அமைக்கப்படும் என மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம், ஏற்காட்டில் புதிய வானிலை ரேடார்கள் விரைவில் அமைக்கப்படும். ஏற்கனவே சென்னையில் 2 ரேடார்களும், புதுச்சேரி காரைக்காலில் ஒரு ரேடாரும் உள்ளன. தென் மாவட்டங்களுக்கான வானிலை தரவுகளை திரட்டி முன்னெச்சரிக்கை வழங்க ராமநாதபுரம் ரேடார் உதவியாக இருக்கும். ஏற்காடு ரேடார் இதுவரை அதிக கண்காணிப்பு இல்லாத உள் மாவட்டங்களுக்கான தரவுகளை பெற உதவும் என மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

The post ராமநாதபுரம், ஏற்காட்டில் புதிய வானிலை ரேடார்கள் விரைவில் அமைக்கப்படும்: மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் ரவிச்சந்திரன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: