மக்களவை தேர்தலில் தீவிர பிரச்சாரம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த கூட்டணி கட்சி தலைவர்கள்..!!

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணி கட்சி தலைவர்கள் நன்றி தெரிவித்தனர். மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்ததற்காக நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து நன்றி தெரிவித்தார். இதேபோல் ஐ.யு.எம்.எல். தலைவர் காதர் மொய்தீன், முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஏற்கெனவே முதல்வரை சந்தித்தனர்.

The post மக்களவை தேர்தலில் தீவிர பிரச்சாரம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த கூட்டணி கட்சி தலைவர்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: