தமிழ்நாட்டில் இதுவரை அரசு பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 2,38,623 மாணவர்களும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 61,142 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 23,370 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1749 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

 

The post தமிழ்நாட்டில் இதுவரை அரசு பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வித்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: