அந்த மனுக்களில், ‘பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில், 22 மாணவர்களின் பெற்றோரிடம் அனுமதி பெற்றே அவர்கள் பேரணிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாணவர்கள் யாரையும் நிர்பந்திக்கவில்லை. மாணவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தவில்லை. பள்ளி நிர்வாகத்தை துன்புறுத்தும் நோக்கத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை ஜூன் 2வது வாரத்திற்கு தள்ளிவைத்தார். ஏற்கனவே, சாய்பாபா வித்யாலயா என்ற அரசு உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக பதியப்பட்ட வழக்கிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post கோவையில் மோடி நடத்திய ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகள் வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் மனு தாக்கல்: ஜூன் மாதத்திற்கு விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.