கூடுதலாக 6 நாய்கள் குற்றங்களை கண்டறியவும், 1 நாய் போதை பொருட்கள் கண்டறிதலுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெருநகர காவல் மோப்ப நாய் பிரிவுக்கு பெல்ஜியன் ஷெப்பர் வகையை சேர்ந்த 3 நாய் குட்டிகள் வாங்கப்பட்டுள்ளது. 3 மாதங்களேயான இந்த நாய் குட்டிகளுக்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று தனது அலுவலகத்தில் ‘கார்லோஸ், சார்லஸ், லாண்டோ’ என பெயர் சூட்டினார். இந்த 3 நாய் குட்டிகளுக்கும் பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்படும் என மோப்ப நாய் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 5 நாய்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு மாதவரம் நாய்கள் பராமரிப்பு இடத்தில், உரிய மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
The post பெருநகர காவல் மோப்ப நாய் பிரிவுக்கு பெல்ஜியன் ஷெப்பர் வகை 3 நாய் குட்டிகள் புது வரவு: போலீஸ் கமிஷனர் பெயர் சூட்டினார் appeared first on Dinakaran.