வேலூர் பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் விற்பனை அமோகம்

*வெளிமாநில வியாபாரிகள் வருகை இல்லை

வேலூர் : வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் வரத்து அதிகமாக இருந்தால் விற்பனை அமோகமாக இருந்தது.வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை இன்று வழக்கம்போல் நடந்தது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் உள்ளூர் நாட்டு கறவை மாடுகள், கலப்பின கறவை மாடுகள், ஜெர்சி பசுக்கள், உழவு மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள், கன்றுகள், எருமைகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

இந்த நிலையில் மக்களவை தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்த பின்னர் பொய்கை மாட்டுச்சந்தையில் விற்பனை மந்தமாக இருந்தது. காரணம், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொண்டு செல்வதாக இருந்தால் அதற்கு உரிய ஆவணம் இருக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தை விதியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மாடு வாங்க வந்த வியாபாரிகளிடம் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து வந்ததை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் கடந்த சில வாரங்களாக மாடுகள் விற்பனை டல் அடித்தது.

இதற்கிடையில் தமிழகத்தில் கடந்த 19ம்தேதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதனால் இங்கு ₹50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்ல தடை இல்லை. இருப்பினும் ஆந்திரா, கர்நாடாகவில் தேர்தல் இன்னும் முடியாத நிலையில் இரு மாநில எல்லைகளிலும் தொடர்ந்து பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நடந்த மாட்டு சந்தையில் ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரபப்ட்டது. விற்பனையும் அமோகமாக நடந்தது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால் ₹50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை எடுத்து வர முடியவில்லை. இதனால் மாடுகளை வாங்க விவசாயிகள், வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. தமிழகத்தில் தடை நீங்கினாலும், ஆந்திரா, கர்நாடகாவில் தேர்தல் இன்னும் நடக்கவில்லை.

இதனால் அங்கிருந்து வரும் வியாபாரிகள் வரவில்லை. உள்ளூர் வியாபாரிகள் மட்டுமே வந்தனர்.
விற்பனை அமோகமாக நடந்தது. பழைய மாதிரி பெரிய அளவில் வியாபாரம் இல்லை. இன்னும் சில வாரங்கள் போனால்தான் வியாபாரம் களைக்கட்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post வேலூர் பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Related Stories: