×

ஜாபர்சேட் மனைவி மீதான குற்றப்பத்திரிகை ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர்சேட் மனைவி பர்வீன் மீதான குற்றப்பத்திரிக்கையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. வீட்டுமனை ஒதுக்கீடு ஊழல் விவகாரத்தில் ஜாபர் சேட் மனைவி பர்வின் மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 2008-ல் தமிழ்நாடு அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டில் பர்வீன் உள்ளிட்டோருக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்திருந்தது. அரசு ஒதுக்கிய வீட்டுமனையில் குடியிருப்பு கட்டியதாக கடந்த 2013-ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி பர்வீன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

The post ஜாபர்சேட் மனைவி மீதான குற்றப்பத்திரிகை ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Jabbersade ,Supreme Court ,Delhi ,Jabersade ,Parveen ,Zafar Chet ,Tamil Nadu government ,
× RELATED சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில்...