நாளை வாக்குப்பதிவு வெளியாட்களை வெளியேற்ற போலீசார் அதிரடி சோதனை

ஆண்டிபட்டி, ஏப். 18: நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் வெளியாட்களை வெளியேற்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து ஒரு தொகுதியில் வாக்காளர்களாக இல்லாமல் வெளியிலிருந்து அழைத்து வரப்பெற்ற அரசியல் தொண்டர்கள் அல்லது பணியாளர்கள் நியாயமான தேர்தல் நடைபெறுவதை சீர்குலைக்க வாய்ப்புள்ளதால் பிரச்சாரம் முடிந்தவுடன், தேர்தல் நடக்கும் 48 மணி நேரத்திற்கு முன்பாக தொகுதியிலிருந்து உடனடியாக வெளியேற்றிவிட வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தேனி தொகுதிக்குட்பட்ட திருமண மண்டபங்கள், விருந்தினர் மாளிகைகள், சமுதாய கூடங்கள், லாட்ஜ்களில் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகளால் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டன. மேலும், தொகுதிக்கு வெளியிலிருந்து வரும் வாகன போக்குவரத்தை கண்காணிக்க எல்லையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post நாளை வாக்குப்பதிவு வெளியாட்களை வெளியேற்ற போலீசார் அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Related Stories: