சுனாமி குடியிருப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாஜ மாநில நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். அப்போது, அந்த பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்களிடம் மட்டையை வாங்கிய மத்திய அமைச்சர் கிரிக்கெட் விளையாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். உடன் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், மாநில நிர்வாகிகள் சதீஷ்குமார், மோட்சம், சாம் ஆர்தர் ஜெபக்குமார், ஜெய் கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆர்.சி.பால்கனகராஜுக்கு ஆதரவாக இந்திய நாடார்கள் பேரமைப்பு நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். இதில் பேரமைப்பு வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ஆர்.வெங்கடேசன், வியாபாரிகள் முன்னேற்ற அணி பொருளாளர் ஆர்.திரவியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post வடசென்னை பாஜ வேட்பாளர் ஆர்.சி.பால்கனராஜுக்கு ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் தீவிர வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.