கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

தேன்கனிக்கோட்டை, ஏப்.15: தேன்கனிக்கோட்டை அருகே, கிரானைட் கல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே, நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி புவியியல் மற்றும் சுரங்க துறை அலுவலர் சரவணன் (38), தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அவ்வழியாக வந்த லாரியை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், உரிய அனுமதியின்றி கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளிக்கு கிரானைட் கற்கள் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கிரானைட் கற்கள் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, போலீசில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: