மாணவி கடத்தல் வாலிபர் மீது புகார்

கிருஷ்ணகிரி, ஏப்.13: சூளகிரி அருகே கோபசந்திரம் ஜோதி நகரைச் சேர்ந்த 17வயது சிறுமி, போலுப்பள்ளி பகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம், கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெற்றோர், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதில், பையனப்பள்ளியை சேர்ந்த நரசிம்மன்(24) என்பவர் தங்களது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாணவி கடத்தல் வாலிபர் மீது புகார் appeared first on Dinakaran.

Related Stories: