சூதாடிய 4பேர் கைது

கிருஷ்ணகிரி, ஏப்.13: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் எஸ்ஐ செல்வமாணிக்கம் மற்றும் போலீசார், கொல்ரூர் பகுதியில் உள்ள தனியார் வீட்டு மனை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சூதாடிக் கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த பெரியதம்பி, குமரக்கொட்டாயன் முருகேசன்(30), கொல்ரூர் சுரேஷ்(30), ராமச்சந்திரன்(22) என்பது தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

The post சூதாடிய 4பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: