இதனை நம்பி தேர்தல் பத்திரங்களை வாங்க மன்வர் குடும்பம் ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாங்கப்பட்ட அந்த தேர்தல் பத்திரங்களை பாஜக பணமாக்கி இருப்பது தற்போது அம்பலம் ஆகியுள்ளது. தாங்கள் ஏமாற்றப்பட்டதை பட்டியலினத்தைச் சேர்ந்த அந்த விவசாய குடும்பத்தினர் கடந்த மார்ச் 18ம் தேதி குஜராத் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதானி நிறுவனத்தின் 4 இயக்குனர்கள், மேலாளர் மகேந்திர சிங், பாஜக பிரமுகர் ஹேமந்த் உள்ளிட்டோர் மீது விவசாய குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
The post பாஜகவுக்கு ரூ.10 கோடி நன்கொடை கொடுத்து ஏமாந்த ஏழை விவசாயி…பாஜக பிரமுகர், அதானி நிறுவன மேலாளர் உள்ளிட்டோர் மீது புகார் appeared first on Dinakaran.