வியாபாரியிடம் ₹61,000 பறிமுதல்

ஊத்தங்கரை, ஏப்.6: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, ஊத்தங்கரை அருகே சாமல்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில், நேற்று உதவி வேளாண்மை அலுவலர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஊத்தங்கரை நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், உரிய ஆவணங்களின்றி ₹61 ஆயிரம் எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வண்டியில் வந்த பெங்களூரு கெங்கேரி பகுதியைச் சேர்ந்த தர்பூசணி வியாபாரி இர்ஃபான் என்பவரிடமிருந்து ₹61 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், ஊத்தங்கரை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

The post வியாபாரியிடம் ₹61,000 பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: