முக்தாரின் உடல் நேற்று முன்தினம் அவரது சொந்த ஊரான காசிப்பூருக்கு கொண்டு வரப்பட்டது.நேற்று பலத்த பாதுகாப்புடன் உடல் அடக்கம் நடந்தது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தில் அவருடைய உறவினர்களுக்கும் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. வெளி நபர்கள் யாரும் அனுமதிக்கப்படாததால் கலெக்டருக்கும், முக்தாரின் அண்ணன் சமாஜ்வாடியை சேர்ந்த எம்பி அப்சல் அன்சாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே,முக்தாரின் உடலை, 5 மருத்துவர்கள் கொண்ட குழு உடற்கூராய்வு செய்தது. மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளார் என்று மருத்துவர்கள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
The post இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு உபி முன்னாள் எம்எல்ஏ முக்தாரின் உடல் அடக்கம்: கலெக்டர்-சமாஜ்வாடி எம்பி மோதல் appeared first on Dinakaran.