×

மரத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு

கிருஷ்ணகிரி, மார்ச் 29: ராயக்கோட்டை அடுத்த தொன்னியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (65), விவசாயி. இவர் நேற்று விவசாய தோட்டத்தில் உள்ள மரத்தில் ஏறி, புளியம் பழங்களை உலுக்கிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென மரத்தில் இருந்து தவறி ராஜேந்திரன் கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மரத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Rajendran ,Thonniyambatti ,Rayakottai ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்