தமிழ்நாட்டில் 5 நாளுக்கு வெப்பம் அதிகரிக்கும்

சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலவும் வறண்ட வானிலை காரணமாக 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக திருப்பத்தூர், ஈரோடு மாவட்டங்களில் 012 டிகிரி வெயில் கொளுத்தியது. சேலம், கரூர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் நேற்று 100 டிகிரி வெயில் நீடித்தது. மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் இயல்பைவிட 3 டிகிரி செலசியஸ் வரையில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் 29ம் தேதி வரையில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும். அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காற்றில் இருக்கும் போது ஓரிரு இடங்களில் பொதுமக்களுக்கு லேசான பாதிப்புகள் இருக்க வாய்ப்புள்ளது. மேலும், 31ம் தேதி முதல் சில இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

The post தமிழ்நாட்டில் 5 நாளுக்கு வெப்பம் அதிகரிக்கும் appeared first on Dinakaran.

Related Stories: