10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ செல்வங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே… ‘‘ஆல் த பெஸ்ட்’’ நீங்கள் பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளை படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை மற்றுமொரு தேர்வாக கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதிசெய்யுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: