இதையடுத்து, இருவர் மீதும் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி.திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் தடயவியல் அறிக்கை உள்ளிட்ட ஆதாரங்களுடனும், சாட்சிகளுடனும் நிரூபிக்கப்பட்டதால் அம்மு, ஜான்சி ராணி இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.
The post கஞ்சா விற்ற 2 பெண்களுக்கு தலா 5 ஆண்டு கடுங்காவல் சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.