அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை என அபுதாஹிர் தெரிவித்தார். பின்னர் அவரிடமிருந்து ரூ.4 லட்சத்தை பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கருவூலத்தில் ஒப்படைத்தனர். மற்றொரு சம்பவம்: எம்கேபி நகர் சென்ட்ரல் அவென்யூ சாலையில் நேற்று மாலை மாநகராட்சி உதவி பொறியாளர் பாஸ்கர் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் உள்ளிட்டோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை மடக்கி சோதனை செய்தபோது, அதில் ரூ.1.27 லட்சம் இருந்தது. அந்த பணத்தை கொண்டு வந்த கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த சாதர்ஷ் என்பவரிடம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பிறக்கும் படையினர் பணத்தை கைப்பற்றி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
வேளச்சேரி:
அடையாறு இந்திரா நகர் அருகே பறக்கும் படை அதிகாரி பிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில், ரூ.1.5 லட்சம் இருந்தது. காரில் இருந்த துரைப்பாக்கத்தை சேர்நத கலா (66) என்பவரிடம் விசாரித்தபோது, அவரது மகன் வெளிநாட்டில் இருப்பதாகவும், அடுத்த மாதம் தானும் வெளிநாடு செல்ல இருப்பதால், அதற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக பணம் எடுத்து வந்ததும் தெரியவந்தது. ஆனால், அதற்கான ஆவணம் இல்லாததால், பணத்தை கைப்பற்றி சைதாப்பேட்டை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
The post ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.6.32 லட்சம் அதிரடி பறிமுதல்: பறக்கும்படை நடவடிக்கை appeared first on Dinakaran.