இந்த நிலையில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என கடந்த 2 வாரங்களாக சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யபட்டு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி மறுத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஆயுதப்படை பயிற்சியாளர் துரைராஜா உள்ளிட்ட 2 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை எடுக்கபட்டுள்ள நிலையில், மீண்டும் 2 பெண்கள் உள்பட 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை எடுக்கவேண்டும் என சிபிசிஐடி போலீசார், மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். 3 முறை ஒத்திவைக்கபட்ட இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனைக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
The post வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி appeared first on Dinakaran.