தமிழ்நாடு அரசு பிணைய பத்திரங்கள் ஏலம்

சென்னை: தமிழ்நாடு நிதித் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்புள்ள பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் விற்பனைக்கு வருகின்றன. மேலும் மற்றொரு ரூ.4 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 30 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் மார்ச் 26ம் தேதி அன்று நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில், மின்னணு படிவத்தில் மார்ச் 26ம் தேதி அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு அரசு பிணைய பத்திரங்கள் ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: