வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் ராகுல் சூறாவளி பிரசாரம்: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் தமிழகத்தில் சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளனர் என்று செல்வப்பெருந்தகை கூறினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரிஅனந்தனின் 92வது பிறந்த நாள் விழா தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியமூர்த்தி பவனில் நேற்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. குமரி அனந்தனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து, தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர், பொருளாளர் ரூபி மனோகரன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர் ஆலங்குளம் காமராஜ், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன் மற்றும் நிர்வாகிகள் சுமதி அன்பரசு, அடையார் பாஸ்கர், சூளை ராஜேந்திரன், மா.வே.மலையராஜா உள்பட ஏராளமானோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

* செல்வப் பெருந்தகை பேட்டி:

குஷ்பு சொன்ன அதே கருத்தை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தமிழக மக்களை பிச்சை எடுக்க வைத்திருக்கிறார்கள் என்று சொல்லி தமிழ்நாட்டு மக்களை நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்தி உள்ளார். இதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜ கூட்டணிக்கு சென்ற பாமக மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளது. அந்த கட்சியும் மூழ்கும். முன்னாள் ஆளுநர் தமிழிசை தமிழகத்தில் போட்டியிட்டால் நோட்டாவை விட குறைவான வாக்குகளே பெறுவார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே சூறாவளி பிரசாரம் செய்ய இருக்கிறார்கள்.

The post வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் ராகுல் சூறாவளி பிரசாரம்: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: